
வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக இலங்கையில் உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களில் 9.1 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை அடுத்த வருடம் வேலை வாய்ப்பை வழங்காது என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியுமான பல தொழிற் சாலைகள் வடக்கில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.