
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வேல்ஸில் 30பேர் வரை வெளியில் சந்திக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜூன் பிற்பகுதி வரை வீடுகளில் அல்லது நிகழ்வுகளில் வீட்டிற்குள் சந்திக்கக்கூடிய எண்ணிக்கையில் அதிகரிப்பு நடக்காது.
இது அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கும் என்று வேல்ஸ் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட மாறுபாட்டின் பரவல் குறித்து கவலை இருப்பதாக அரசாங்கம் கூறியது.
வேல்ஸில் தற்போது 97 தொற்றுகள் உள்ளன. அவை உலக சுகாதார அமைப்பால் டெல்டா மாறுபாடு என்று பெயரிடப்பட்டுள்ளன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இது 67 சதவீதம் அதிகரித்துள்ளது.