இசை என்னும் சொல் “இயை” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது.

இசையானது “கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது.

இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என மூன்றாகப்பிரிப்பர்
ஒற்றைச்சுரங்கள்இனிமையாகச்சேர்வது இன்னிசை. இந்திய இசை இன்னிசை வகையைச்சேர்ந்தது
ஒத்த சுரங்களின் சுர அடுக்குகள்தம்முள்ஒத்திசைப்பது “ஒத்திசை” எனப்படும். மேலைநாட்டு இசை இந்த வகையைச்சார்ந்ததாகும்
ஒவ்வோர்சுரத்திற்கும்வேறோர்இணைச்சுரம்சேர்க்கப்பட்டுஇரண்டும் ஒன்றாக இசைப்பதுதொகுப்பிசை ஆகும்
இசையின் ஒலிக்குறிப்பு சுரம் எனப்படும்
சுரம் என்பதற்கு இனிமை உடையது என்று பொருள்
இசைத்தல் என்பதும் பொருள்
இசைத்தல் என்பதற்கு பொருந்துதல், ஒன்றாதல் என்று பொருள்
“இசையே புணர்ச்சி” என்பது தொல்க்காப்பியஉரியியல்நூற்பா
இந்தியாவில் இந்துஸ்தானி இசை, கருநாடக இசை என்ற இரு பிரிவுகள் உள்ளன
சுரங்களின்பெயர்கள்:
பழந்தமிழ் நூல்கள்
சுரங்களின்பெயர்கள்
சுரக் குறியீடு
குரல்
சட்சம்

துத்தம்
ரிஷபம்
ரி
கைக்கிளை
காந்தாரம்

உழை
மத்தியமம்

இளி
பஞ்சமம்

விளரி
தைவதம்

தாரம்
நிஷதம்
நி
இவை ஏழு சுரங்கள்எனப்படும்
ஏழு சுரங்களும்ஒன்றைவிட மற்றது வலியது என்ற வரிசையில் ஒலிப்பதுஆரோசை (ஆரோகணம்) ஆகும்
ஏழு சுரங்களும் இறங்கு வரிசையில் ஒலிப்பதுஅமரோசை (அவரோகணம்) ஆகும்
சுரம் என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “நரம்பு” என்பதாகும்
சுரங்கள்சேர்ந்தது “ராகம்” ஆகும்
ராகம் என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “பண்” என்பதாகும்
இந்திய இசை ராகத்தை அடிப்படையாக கொண்டது
பூபாளம், முகாரி, நீலாம்பரி போன்ற பல ராகங்கள் உண்டு
விடியலில் பாட வேண்டிய ராகம்கேதாரம், தன்னியாசி
முற்பகலில்பாடவேண்டியராகம்சாவேரி, தேவமனோகரி
நண்பகலில்பாடவேண்டியராகம் ஸ்ரீராகம், மத்தியமாவதி
பிற்பகலில்பாடவேண்டியராகம்முகாரி, பேகடை
மாலையில் பாடவேண்டியராகம் கல்யாணி, வசந்தம்
எல்லா நேரங்களிலும்பாடப்படும்ராகம்பைரவி, சங்கராபரணம், காம்போதி, ஆரபி
தேவாரப்பாடல்களின்இசையைப்பகற்பண், இராப்பண், பொதுப்பண் என மூன்றாகப்பிரித்துள்ளனர்
இசைக்கருவிகள்:
உலகில் இசைக்கப்படும் எல்லா இசைக் கருவிகளும் அடிப்படையான இசைக்கருவிகள் எல்லாம் கிழக்கு நாடுகளில் தோன்றின
தமிழ்நாட்டில் இசைக்கருவிகளை நான்கு வகையாகப்பிரிப்பர்

  1. தோல்கருவி2. துளைக்கருவி 3. நரம்புக்கருவி4. கஞ்சக்கருவி
    கஞ்சக் கருவி என்பது உலோகக்கருவிகளைக்குறிக்கும்
    தோல் கருவிகள் = பேரிகை, படகம், இடுக்கை, உடுக்கை, மத்தளம், சல்லி, கரடி
    துளைக் கருவிகள் = வங்கியம், கொம்பு, தாரை, குழல், காளம், சங்கு
    நரம்புக் கருவிகள் = யாழ, வீணை, கின்னரி
    கஞ்சக் கருவிகள் = கைமணி, தாளம், கஞ்சதாளம், கொண்டி
    பஞ்சமரபு என்ற பண்டைய இசைத்தமிழ் நூல் பாடகர் பாடுவது மிடற்றுக் கருவி எனக்கூறுகிறது
    இன்று மேலைநாட்டுஇசைக்கருவிகளும்பயன்படுத்தப்படுகின்றன
    முதல் சங்கத்தில்பெருநாரை, பெருகுருகு (முதுநாரை, முதுகுருகு) என்ற நூல்கள் இருந்தன
    பெருநாரை என்பது இசைப்பற்றிய நூல், நரம்பு – நார் – நாரை
    பெருகுருகு என்பது துணைக்கருவிகள் பற்றிய இசைநூல்
    இடை சங்கத்தில்பேரிசை, சிற்றிசை என்ற இசைநூல்கள் இருந்தன
    கடைச்சங்கத்தில்இசைமரபு, இசை நுணுக்கம், ஐந்தொகை அல்லது பஞ்சமரபு என்னும் இசை நூல்கள் இருந்தன
    தொல்க்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நிகண்டுகள், சைவ, வைணவ நூல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், உரை நூல்கள் என எல்லாவற்றிலும் இசைத்தமிழ் குறித்த, தமிழ் இசை குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன
    அடியார்க்குநல்லார்சிலப்பதிகாரஉரையில் பஞ்ச பாரதீயம், பரதசேனாபதீயம், மதிவாணர்நாடகத்தமிழ், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளவகை ஒத்து என்ற இசை இலக்கண நூல்களைக்குறிப்பிட்டுள்ளனர்
    ஐந்து தினைக்கும் உரிய “யாழ” குறித்து இலக்கண நூல்கள் கூறுகின்றன
    தமிழிசை வரலாறு:
    ஒவ்வொரு இனத்திற்கும்உரியதாய் ஓர் இசைமரபு இருக்கும். தமிழுக்கும் உரிய இசை மரபு தமிழிசை ஆகும்
    “இசையோடுசிவணியநரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார் தொல்காப்பியர்
    பரிபாடல் தூக்கு, வண்ணம் குறித்துக்கூறுகிறது
    கலித்தொகையின்தாழிசைஇசைப்பாட்டே
    பாணரும்கூத்தரும் இசை வளர்த்த கலைஞர்களேஆவர்
    சிலப்பதிகாரத்தின்அரங்கேற்றுக்காதை, கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவரி, குன்றக்குரவைபகுதிகள்இசைப்பற்றியன
    களப்பிரர் காலத்தில் காரைக்கால் அம்மையாரின்திருவண்ணத்தந்தாதி போன்ற பதிகங்கள்இசையுடன்பாடப்பட்டன
    பல்லவர் காலத்தில் மூவர்முதலிகள் தமிழ் இசையை நன்கு வளர்த்தனர்
    நம்மாழ்வாரின் திருவாய்மொழி இசையை மேலும் வளர்த்தது
    கொங்குவேள்மாக்கதையாகிய பெருங்கதை யாழிசை குறித்த பல செய்திகளைக்கூறுகிறது. உதயணன்இசைப்பாடி வென்று சுரமஞ்சரியைமணக்கிறான்
    முதலாம் மகேந்திரவர்மனின்குடிமியான்மலைக் கல்வெட்டு இசைக் கல்வெட்டாகும்
    பெரியபுராணத்தில்ஆனாயநாயனார்புராணத்தில்குழலிசை பற்றியும் திருநீலகண்டஅனாரின்புராணத்தில்யாழ்த்திறம் பற்றியும் குறிப்புகள் உள்ளன
    திருவிளையாடல் புராணங்களில் அமைந்துள்ள சாதாரிபாடின திருவிளையாடல் விறகு விற்ற திருவிளையாடல் ஆகிய இசை பற்றியன
    அருணகிரிநாதரின்திருப்புகழ்ப்பாடல்கள்தாளக்கலைக்குவேதமாகத்திகழ்கிறது
    தமிழிசையும்ஆரியசங்கீதமும் கலந்து கர்நாடக சங்கீதம் தோன்றியது என்பர்
    பண்டைய தமிழிசைகருநாடகசங்கீதமாகவழங்குகிறது என்று தண்டபாணி தேசிகர் போன்றோர் கருதுகின்றனர்
    ராகத்தைமுதன்மையாககக் கொண்டது சங்கீதங்கள்
    சங்கீதத்தோடுபாட்டும் இணைந்தது சாகித்தியங்கள் ஆகும்
    சீர்காழியில் பிறந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்துப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் ஆகிய மூவரும் தமிழ் பாடி தமிழிசைவளர்த்தனர்
    இம்மொவரையும் “தமிழ் மூவர்” என்றும் “சீர்காழி மூவர்” என்றும் “கருநாடக சங்கீத ஆதி மும்மூர்த்திகள்” என்றும் போற்றுவர்
    இம்மூவரே பல்லவி – அனுபல்லவி – சரணம் என்ற அமைப்பில் பாடும் பாடல் மரபைத்தோற்றுவித்தனர்
    இம்மரபைப் பின் வந்த சங்கீத மும்மூர்த்திகள்பின்பற்றினர்
    நாயக்கர் காலத்தில் தியாகையர், சியாமாசாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் மூவரும் கீர்த்தனைகள்பாடினர்
    ஆபிரகாம் பண்டிதர் “கருணாமிர்த சாகரம்” என்ற நூலை இயற்றினார்
    இலங்கையில் பிறந்த விபுலானந்த அடிகள் “யாழ் நூல்” இயற்றினார். வழக்கொழிந்து போன யாழ குறித்து ஆராய்ந்ததோடு “யாழ்” கருவியை செய்து அதனை மீட்டியும்காட்டினார்
    அண்ணாமலை செட்டியார்தமிழிசைச் சங்கம் வைத்துத்தமிழிசையைக்காத்தார்
    தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழ் இசைக்குப்பாடுபட்டனர்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal