
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லெபனானில் மொத்தமாக ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து 299பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 40ஆவது நாடாக விளங்கும் லெபனானில் ஆறாயிரத்து 778பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 460பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 82ஆயிரத்து 346பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 821பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து நான்கு இலட்சத்து 13ஆயிரத்து 175பேர் பூரண குணமடைந்துள்ளனர்.