
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை குறிவைத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் உடல் பாகங்கள் இருக்கும் நிலையில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.