கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது பிரியந்த உடல்
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம், குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.