Month: December 2021

கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது பிரியந்த உடல்

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம், குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.  

ஒரு லட்சம் இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

  க.பொ.த சாதாரணதரத்தைப் பூர்த்தி செய்த ஒரு இலட்சம் மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை சமுர்த்தி, நுண் நிதி, சுயதொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய…

இன்றுகாலை இடம்பெற்ற கோரவிபத்து

இன்று காலை 9 மணியளவில் கனரக டிப்பர் லொறி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இந்த விபத்து…

பாலின் விலையும் அதிகரிப்பு

  சந்தையில் ஒரு லீற்றர் உடனடிப் பாலின் விலை 300 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை ஒரு மாத காலத்தில் 260 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேவேளை தனியார் பால் மா உற்பத்தி…

வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டின் நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களே இவ்வாறு இழுத்து செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையானது இன்றைய தினம் முதல் தொடங்கப்படும்…

மலேரியாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 கடந்தாண்டு உலகளவில் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் மலேரியாவினால் சர்வதேச ரீதியில் 558,000 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டில் 627,000 பேர் மலேரியாவினால் மரணித்தனர்.…

யாழில் திருமணம் செய்யும் ஆசையுடன் வந்த சுவிஸ் மாப்பிள்ளை! புறோக்கரால் நேர்ந்த கதி

யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த சுவிஸ் வாழ்.ஈழத்தமிழரின் கனவில் மண்ணைப் போட்ட புறோக்கரை ஆள் வைத்து அடித்துள்ளார். இச்சம்பவம் இன்று (07) யாழ்.விலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து…

வெளிநாட்டு விமான நிலையத்தில் 297.6 மில்லியன் ரூபா தங்கத்துடன் சிக்கிய இலங்கையர்

297.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2 பேர் கடத்தி வந்த 690 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகநபர்கள்…

யாழ். வீடொன்றில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு

வீடொன்றில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு யாழ்ப்பாணம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை – புங்கன்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் குப்பைகளை உரிமையாளர் புதைப்பதற்காக கிடங்கு ஒன்றினை தோண்டிய சமயத்தில் இந்த குண்டானது…

வரலாற்று சிறப்புமிக்க தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இப்படி ஒரு நாசகார வேலை!

வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் உண்டியல், நேற்று இரவு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோவில் பாதுகாப்பாக பூட்டப்பட்ட வேளை, மணிகோபுரம் ஊடாக ஏறி கோவிலுக்குள் இறங்கிய திருடன், கோவில் மண்டபத்தில் மூலவருக்கு நேராக வைக்கப்பட்ட உண்டியலை…

SCSDO's eHEALTH

Let's Heal