Month: March 2021

புர்கா விவகாரம் – இலங்கை நாடாளுமன்றில் ஆராய்வு!!

இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று கையெழுத்திட்டார் என அறியமுடிகின்றது.…

கொரோனா பாதிப்பில் மேலுமொரு பாராளுமன்ற உறுப்பினர்!!

நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இலங்கை நாடாளுமன்றில் கொரோனா தொற்று உறுதியாகிய 08 ஆவது உறுப்பினர் இவர் என்பது சுட்டிக்காட்டதக்கது. ஏற்கனவே தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணாயக்கார, பியல் நிஷாந்த மற்றும் சுகாதார…

புனர்வாழ்வு தொடர்பில் புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி!

இலங்கையில், கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (சனிக்கிழமை) வெளியாகியுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிக்கும் புதிய ஏற்பாடுகள் அதில்…

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு முக்கியமான செய்தி!

வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்கின்றனர். கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

ஆண் – கவிதை!!

வாழ்க்கை ஒரு வரம்,வாழ்தல் ஒரு கலை,சவால் நிறைந்த வாழ்வில்வாழ்வது ஒரு நிறை.வெற்றிக்கான உழைப்பில்ஆணின் பங்கு அதிகூடுதல். ஆணென்பது இறையியலின்அற்புத படைப்பென்பர்.பற்றுக்கோலாய்தாங்கு தூணாய்ஆணினத்தின் வேரதுபடர்ந்து கிடக்கிறதுநானிலம் எங்கும். சவால் என்று வந்துவிட்டால்சாதிக்கத் துடிப்பவன் ஆண்.சாதனைப் பாதையிலேபோரிடும் குணம் கொண்டவன் ஆண். அணைப்பதில் தாயாகிறான்,அடங்கிடும்…

விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவ டிக்கை – ஜனாதிபதி!!

நேற்று (வெள்ளிக்கிழமை), ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு!!

எதிர்வரும் 17ஆம் திகதி (புதன்கிழமை) யாழ். மாவட்டத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு, கிழக்கு பல்கழலைக்கழகங்களைச் சேர்ந்த…

இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானியாவில் விவாதம்!!

எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள விவாதத்தில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரித்தானியாவின் நடவடிக்கைகள் குறித்த விவாதம் ஒன்று அந்நாட்டு பாராளுமன்றத்தி இடம்பெறவுள்ளது. இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் கடமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.…

பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்!

‘இந்த ஆண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம்.’ கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

வவுனியா பிரதேச சபை சிற்றூழியர் மரணம்!!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் சிற்றூழியராக கடமையாற்றும் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 36) என்பவருக்கு வீட்டில் இருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.…

SCSDO's eHEALTH

Let's Heal