
வானில் இடைநடுவே போர் விமானத்தைக் கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன் இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது.
ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச், கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.