
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்த அவர், இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்து சென்று ஆலய வழிபபட்டில் ஈடுபட்டார்.
சீனத் தூதுவரின் வருகையோட்டி நல்லூர் ஆலயச் சூழல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக காணப்பட்டது
