தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் போர் விமானங்களை பறக்கவிட்ட சீனாவின் செயற்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்கையில், தேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம் என சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள், எங்களை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. நாங்கள் போரில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவோம். தேவைப்பட்டால் எங்களை தற்காத்து கொள்ள கடைசி நாள் வரை போராடுவோம்.

தைவானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. சீனா ஒருபுறம் தங்களது ஆறுதல்களை அனுப்புவதன் மூலம் தைவான் மக்களை கவர்ந்திழுக்க விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் தைவான் மக்களை அச்சுறுத்துவதை நோக்கமாக கொண்டு தைவானுக்கு அருகில் தங்களது இராணுவ விமானங்களையும், இராணுவ கப்பல்களையும் அனுப்புகிறார்கள்.

சீனர்கள், தைவான் மக்களுக்கு மிகவும் கலவையான சமிக்கைகளை அனுப்புகிறார்கள். அதை நான் தோற்கடிப்பதாகவே வகைப்படுத்துவேன்’ என கூறினார்.

தைவானை தங்களது பிராந்தியம் என உரிமைக் கொண்டாடும் சீனா, தேவைப்பட்டால் அமைதியான முறையில் அல்லது இராணுவ பலத்தால் நாட்டை கைப்பற்றுவோம் என அச்சுறுத்தி வருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal