நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இண்டியானாபோலிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பெடெக்ஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பலத்த காயங்களுடன் ஒருவர் உட்பட குறைந்தது நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டு பேர் உயிரிழந்ததோடு மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று சம்பவ இடத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர், தாக்குதலின் பின்னர் தன்னைத்தானே சூட்டுக்கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை மற்றும் விசாரணையாளர்கள் இன்னும் தகவல்களை சேகரிக்கும் பணியில் உள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal