Category: news

இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா!!

 கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. “ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை…

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!!

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம்…

அடுத்த வருடம் நாடு வழமைக்குத் திரும்பும் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை…

அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!!

மின்சாரம்,  கனியவளம், வைத்தியசாலை ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  வெளியிடப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பம்!!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கான விடைகள் இன்று (18) பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சி.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை நேற்றுடன் (17) நிறைவடைந்தது. இந்நிலையில்…

இளம்குடும்பஸ்தர் பிரான்ஸில் மாயம்!!

 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்  ஒருவர் பிரான்சில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  சிவசுப்பிரமணியம் சபேசன் என்ற 41 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும்,  இவர், பிரான்ஸ் பிராந்தியத்தின் 7ம் இலக்க மெத்ரோவான வில்யுப் நகரில் வசித்து வந்தவர் எனவும் கூறப்படுகிறது. …

இலங்கை தொடர்பில் வெளியாகியுள்ள மிக முக்கிய தகவல்!!

 அடுத்து வரும் சில மாதங்கள் இலங்கைக்கு மிக முக்கியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இலங்கைக்கு வழங்கப்படும் மனிதாபிமானச் செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் இத்திட்டத்தின்  கீழ் உதவிகள் பெறும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்,  விவசாயிகள், மாணவர்கள்…

பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் விடுத்துள்ள அறிவிப்பு!!

பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ம் திகதிக்குப் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது ஒன்லைன் மூலமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பிரபலநாடொன்றில் பணி செய்ய இலங்கை தாதியர்களுக்கு அழைப்பு!!

இரண்டாயிரம் தாதியர்களை இந்த ஆண்டு பணிக்கு அழைப்பதற்கு இஸ்ரேல் நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதிநிதிகள் குழு, இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இடைத்தரகர்கள் பணம் கோரினால் தமக்கு அறிவிக்குமாறு அந்நாட்டு, குடித்துக் மற்றும்…

ஆடைகளின் விலைகள் 20% அதிகரிப்பு!!

மின்சார கட்டணத்தை 63% அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  அனைத்து ஆடைகளின் விலையையும் 20 % அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தம்மைக் குறை கூறக் கூடாது எனவும், முடிவுகளை எடுக்கும்…

SCSDO's eHEALTH

Let's Heal