Month: February 2023

சபாஷ்…சரியான முடிவு!!

நாய்க்கும்  சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது… நாய் ஓட ஆரம்பித்தது.. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை …

நாளை வங்கிகள் திறக்கப்படுமா!!

 தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை…

5 இலட்சம் பேர் இலங்கையில் வேலை இழப்பு!!

   2022 ஆம் ஆண்டில் இந்நாட்டில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில்…

நாளை பாடசாலைகள் நடைபெறுமா? – ஜோசப் ஸ்டாலின் விளக்கம்!!

அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மார்.01)  நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார். இதன்படி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள்…

கொன்று குப்பை மேட்டில் வீசப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் – பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்!!

 யாழ்ப்பாணம்.  மல்லாகத்தை சேர்ந்த  குடும்பஸ்தர்  பிரான்ஸில்   கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட நிலையில்  மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் காணாமல் போனதாக  கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வசிக்கும்    அவரது மனைவிக்கு…

நாளை நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டம்!!

 நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (01) நாடளாவிய ரீதியில்  ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பை  முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு  இதனைத் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (28) காலை 10…

அவசர அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு!!

 தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள்  அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை காவல்துறை மா அதிபரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது. கொம்பனித்தெரு – காவல்துறை பிரிவுக்குட்பட்ட  யூனியன் பிளேஸ் பகுதியிலேயே…

இலங்கை அதிகாரிகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கருத்து!!

 தமது சக்தியைப் பயன்படுத்துவதில் இலஙகை அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சட்டவிரோதமாக கண்ணீர்ப்புகை  மற்றும்  நீர்ப்பீரங்கியைப் பயன்படுத்தியதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர்.…

வசந்த முதலிகே உள்ளிட்ட 61 பேர் பிணையில் விடுதலை!!

கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் 61 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

SCSDO's eHEALTH

Let's Heal