நாகவத்தை கடலில் 7 பேர் நீராடச் சென்ற நிலையில் இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (14-01-2022) தைப்பொங்கல் தினத்தன்று மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், 3 பேர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேலும், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரும் நேற்று மாலையும், (15-01-2022) இரவும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே, களுகங்கையில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
