10 ஆயிரம் பெறுமதியான நாணயத் தாளை அச்சிடும் எவ்வித தயார் நிலையும் இலங்கை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை அச்சிட உள்ளதாக பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல (S.R.Attygalle) தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக அரசாங்கம் 10 ஆயிரம் பெறுமதியான நாணயத்தாளை அச்சிட தயாராகி வருவதாக சிலர் போலியான தகவல்களை உருவாக்கியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

10000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்படுகிறதா:உண்மை என்ன?

இதனிடையே அந்நிய செலாவணி கையிருப்பை துரிதமாக அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி இதற்கான திட்டங்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளது எனவும் அவர மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாளை வெளியிடவுள்ளதாக பொய்யான செய்திகள் சமூ ஊடகங்கள் வாயிலாக பரப்பபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal