பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி இருவரும் நிஜத்திலேயே காதலிக்கிறார்கள் என பல வருடங்களாகவே கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என பிரபாஸ் விளக்கம் கொடுத்தாலும் கிசுகிசு மட்டும் நின்றபாடில்லை.

அவர்கள் தற்போதும் காதலில் தான் இருக்கிறார்கள் என அவ்வப்போது கிசுகிசு செய்திகள் வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டியின் திருமணத்தை பிரபாஸ் தடுத்து நிறுத்திவிட்டார் என ஒரு வெளியாகி இருக்கும் ஒரு செய்தி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகுபலி படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது அனுஷ்கா வீட்டில் திருமண ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்களாம். அப்போது அனுஷ்காவிடம் பேசிய பிரபாஸ், தற்போது திருமணம் வேண்டாம், பாகுபலி படத்தில் மட்டும் கவனம் செலுத்து என கூறினாராம். அதன் பின் தான் அனுஷ்கா திருமணம் தற்போதைக்கு வேண்டாம் என முடிவெடுத்ததாக தெரிகிறது. பாகுபலி படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பிரபாஸ் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal