அமெரிக்கா,பிரிட்டன் உள்பட 8 நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்து அந்நாட்டு பயணிகளுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்ததன் காரணமாக 8 நாடுகளுக்கான தடைக்கு இஸ்ரேல் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் துருக்கி, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, தான்சானியா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
தினசரி 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலையில் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
