
பதினான்கு நாட்களாக கண்காணிப்பு வலயத்துக்குள் இருந்த யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி, இன்று ( திங்கட்கிழமை) காலையில் இருந்து கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவிப்பினை நேற்று விடுத்திருந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம், இன்று முதல் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.