நாட்டில் இன்று அரசாங்கத்தால் (திங்கட்கிழமை) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும்- வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன.

மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டார்.

எனினும் வங்கி அல்லது வர்த்தக விடுமுறைக்கு இந்தத் தினம் பொருந்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விசேட பொது விடுமுறை தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அளககோன் தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal