
மட்டக்களப்பு வடமுனை காட்டுப்பகுதியில் வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த ஒரு வயது நிரம்பிய யானைக் குட்டியை பெரும் சிரமத்திற்கு மத்தியில் வன அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட யானைக் குட்டிக்கு அம்பாறை மாவட்ட மிருக வைத்திய அதிகாரி எம்.புஸ்பகுமார உடனடி வைத்திய வசதிகளை செய்து அதனை அம்பாறை வனவள திணைக்களத்திற்கு எடுத்துச் சென்று முழுமையான சிகிச்சை வழங்கி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.