யாழ்.தென்மராட்சியில் நெருப்பு காய்ச்சலுடன் சிலர் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாரும் சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொிவித்துள்ளது.

நெருப்பு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அவையாவன, நீங்கள் உள்ளெடுக்கும் நீர் மற்றும் உணவு என்பவற்றின் சுகாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்.

கொதித்தாறிய அல்லது குளோறின் மூலம் பரிகரிப்பு செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்துங்கள், பாதுகாப்பாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை கொள்வனவு செய்து உண்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் உடனுக்குடன் சமைத்த உணவை உண்ணுமாரும், சமைத்த உணவுகளை பாதுகாப்பாக மூடி வைத்துக் கொள்ளுமாரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு சமைக்காது உண்ணும பழங்கள், பச்சை இலை வகைகள் என்பவற்றை நன்கு கழுவி பயன்படுத்துமாரும் கூறப்பட்டுள்ளது.

மேலும் , உணவு தயாரித்தல், பரிமாறல், மலசலகூட பாவனை ஆகியவற்றின் பின்னர் சவர்காரம் இட்டு கைகளை சுத்தம் செய்யுமாரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை நோய் அறிகுறிகள் ஏற்படின் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal