கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வௌ்ளவத்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து அந்த நபர் குதித்துள்ளதாக வௌ்ளவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

87 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதியவர் எடுத்த விபரீத முடிவு! வெளியான காரணம்

அவருக்கு ஏற்பட்ட மனவேதனை காரணமாக அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal