மணமகனின் கண் முன்னே மணப்பெண்ணின் காதலர் செய்த செயல்! அதிர்ச்சியில் உறவினர்கள்

அண்மையில் இடம்பெற்ற திருமண வரவேற்பு விழா ஒன்றில் மணமகனின் கண் முன்னே மணப்பெண்ணின் நெற்றியில் முன்னாள் காதலர் குங்குமத் திலகமிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவமானது இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலையிட மணமகன் எழுந்து நின்ற வேளையில், முகத்தில் கைக்குட்டையால் மறைத்தவாறு ஒரு இளைஞர் மணமேடைக்கு வந்தார்.

இதேவேளை, யாரும் எதிர்பார்க்காத நிலையில் மணப்பெண்ணின் நெற்றியில் அவர் குங்குமத் திலகமிட்டார். இதனால் மணமகன், மணமகனின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து குறித்த இளைஞரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அனைவரையும் தள்ளிவிட்டு அவர் தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு எடுக்கப்பட்ட காணொளியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பின்னர் விசாரணை மேற்கொண்டதில் அந்த மணமகளின் முன்னாள் காதலர்தான் அந்த இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. தனக்குத் தெரியாமல் காதலி ஏமாற்றிவிட்டாள் என்பதால் ஆத்திரமடைந்து தனது காதலை ஊரறியச் சொல்வதற்காக காதலியின் நெற்றியில் அவர் திலகமிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பின்னர் அந்த இளைஞரை, மணப்பெண்ணின் பெற்றோர் தேடிப் பிடித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

பின்னர் அடுத்தநாள் காலை எந்தவிதப் பிரச்சினையும் இன்றி திருமணம் சுமூகமாக நடைபெற்றுள்ளது. திருமண மண்டபத்தில் ஏராளமானோருக்கு முன்னிலையில் மணப்பெண்ணின் நெற்றியில் இளைஞர் திலகமிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal