சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் ” தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் தடுப்பூசி திருவிழா தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் நேற்று ஆரம்பமாகியது. தினமும் 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விழா 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. எனவும் 17 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன “எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏராளமான மக்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமாகவுள்ளனர்.

தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் அவ்வவ்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே பொது சுகாதாரத்துறை இயக்குனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பணியாளர்களுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் நேரடியாக சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனக்கூறியுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal