கொரோனா மரணத்தால் பதற்றத்துக்குள்ளான கிராமம்

இலங்கையில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கொரோனா மரணத்தால் அந்த கிராமம் தற்போது கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.

புத்தல, ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மினிபுரகம பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவர் மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இறந்தவரின் சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் உறவினர்களை அழைத்து குறித்த மரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறித்த சடலத்தினை தனிப்படுத்தல் விதிகளின்படி அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். வீட்டில் உள்ளவர்களை தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பதற்றத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal