
இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கோலிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக விராட் கோலி இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பதவியை துறந்தார். அதனையடுத்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக தொடருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அன்மையில் ஒரு நாள் அணியின் கேப்டன் பதவி தொடர்பில் ரோஹித் மற்றும் கோலி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி இந்திய ஒருநாள் அணிக்கு ரோஹித் சர்மா அவர்கள் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.