கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தான புதிய பிறழ்வு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பி.1.1.28.2 என்ற இந்த புதிய பிறழ்வை புனேயில் உள்ள National Institute of Virology ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த வைரஸ்கள் பிரித்தானியா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களின் மரபணுக்களில் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொற்று ஏற்பட்டால் உடல் எடை குறைதல், சுவாச குழாயிலேயே வைரஸ்கள் பல்கி பெருகி, நுரையீரல் புண்கள் உருவாகும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு வைரஸை போன்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஆல்பா மரபணு மாற்ற வைரஸை விட அபாயகரமானது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal