Tag: Srilanka

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

 இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

40 “சிபெட்கோ” எரிபொருள் நிலையங்களுக்கான தடை நீக்கம்!!

QR விதிமுறைகளை மீறி எரிபொருள் விற்பனை செய்ததற்காக தடை செய்யப்பட்ட 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு…

ஆயிரம் ரூபாவை எட்டுமா டொலரின் பெறுமதி!!

 டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவை எட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த மத விவகாரப் பிரதானி கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவரான இவர்,  டொலர் திரட்டிக் கொள்வதற்கான சரியான முறைகள் எதுவும் அரசாங்கத்திற்கு  கிடையாது எனவும் எதிர்வரும் ஆறு மாத காலப்…

விடைத்தாள் மதிப்பீட்டு பணியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு!!

க.பொ.த (உ/த) விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்வதற்காக செலுத்தப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்ய நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபா பணமானது 2,000 ருபாகவும், 81 கி.மீ.க்கு மேல்…

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்!!

இலங்கை முழுதும் ஈஸ்டர் நாளை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.   கத்தோலிக்க தேவாலயங்களை முன்னிறுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

பூப்புனித நீராட்டு விழாவிற்காக வந்து விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் சென்றது!!

 முல்லைத்தீவு- அளம்பில் பகுதியில் மகளுக்கு  பூப்புனித  நீராட்டு விழா செய்வதற்காக வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் உற பூப்புனித நீராட்டு விழாவிற்காக வந்து விபத்தில்…

யாழ். அச்சுவேலி பகுதியில் அரச உத்தியோகத்தர் எனக்கூறி பணமோசடி!!

 யாழ்ப்பாணம் – அச்சுவேலி வளலாய் பகுதியில் தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணொருவரிடம்  சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கவுள்ளதாகவும் அதற்காக இருபதாயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து பண மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மோசடி எனத் தெரிந்த போதும் தன்னுடைய…

தேசிய மரபுரிமை சின்னமாக மாறுகிறது தெமோதரை பாலம்!!

தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை(Nine Arches Bridge) தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

40 எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விற்பனை இடைநிறுத்தம்!!

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR குறியீட்டை மீறி தொடர்ச்சியாக எரிபொருள் விற்பனை செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.…

புத்தாண்டை முன்னிட்டு சேவையில் ஈடுபடவுள்ள மேலதிக தனியார் பஸ்கள்!!

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் கொழும்பில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தனியார் பஸ் சேவையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஏப்ரல் 10ஆம் திகதி முதல் விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என…

SCSDO's eHEALTH

Let's Heal