Category: கவிதை

கல்லறை தேசத்துப் பூக்களாய்….கவிதை!!

எழுதியவர் –தூரா.துளசிதாசன் வேர் முளைத்துவிழுதுகளாக மண்ணில்கரம்பிடித்த எம்சிரசைவெட்டி எடுத்துவிறகாக சாம்பலாக்கினீர்கள் ..நீர்ச்சுனைகளில் மலர்ந்துமணம்வீசினோம் ஆம்பலாக..தடாகத்தின் வயிற்றைகிழித்தெடுத்து எம்மைஅமிலத்தில் அமிழ்த்தினீர்கள்..விடியலின் பிறப்பிற்காககூவினோம் குயிலாக…சிறகை பிய்த்தெறிந்துமென்று சாப்பிட்டுஏப்பமிட்டு வீசினீர்கள்…இதயப் பைகளில்தேசத்தின் நேசக்காற்றைஅடைத்து குருதிமையைபருகிய கரிக்கோல்கள்எம்மை காளானாய்பிடுங்கி யெறிந்தீர்கள்…அதிகார நாற்காலியில்அமர்ந்து அடக்கியேகாலணியால் நசுக்கினாலும்உயிர் மூச்சைபிடித்து இறுத்தி,உயிர்த்தெழுவோம்…

அம்மாவின் ஆத்மா – கவிதை!!

எழுதியவர் -துளசி வேந்தன். வீட்டு முற்றத்தில்கிடத்தியிருக்கிறதுஅம்மாவின் உடல்,பக்கத்து சுவற்றில்,மாட்டுச்சாணம்மொழுகியஅவளின் தடம்இன்னும் ஈரம் போகாமல்அப்படியேதானிருக்கிறது,அவளின் தாலிச்சரடுதனக்கென்றுபிடிவாதமாய்தலைமாட்டில்பெரிய அக்கா,அவளின் காதுத்தோடுதனக்கென்றுபிடிவாதமாய்காலடியில்சின்ன அக்கா,அந்நேரம் பார்த்து,கொட்டகையிலிருந்து,“அம்மா அம்மா”என்று கதறும் பசுக்கள்அவளைத் தேடுகிறது,அவிழ்த்து விட்ட,கன்றுகள் ஓடிவந்து,பெரியக்காவையும்,சின்னக்காவையும்,முட்டித்தள்ளி,கட்டியிருக்கும்அம்மாவின் கால்களைநக்குகின்றன…

கவித்துளிகள்!!

எழுதியவர் – சுயம்பு செருப்பணிந்தும்முள் குத்தியதுஅவள் வார்த்தை❤சுட்டது வெயில்ஓதுங்கினேன்குத்தவில்லைமுள் மர நிழல்❤“மழை பிடிக்கும்”எழுதிய கவிஞன் வீட்டில்பிடிக்க பாத்திரமின்றிவழிந்தோடியது“மழை நீர்”❤ஈரமற்ற வறுமைஊதிக் கொண்டிருந்தாள்பற்ற வில்லை“ஈர விறகு”❤காதர் வீட்டு கல்யாணம்விருந்தாகினமுருகன் வீட்டு ஆடுகள்❤சித்தாள் சேலையில் ஓட்டைபார்வையால் அடைத்தார்மேஸ்திரி❤பகலில் சிரிக்கராத்திரி ரணமானாள்❤

வாழ்க்கைப் போராட்டம் – கவிதை!!

எழுதியவர் -கா.ரஹ்மத்துல்லாஹ்… போதும்!எனது புலன்களைஎத்தனை நேரம்தான்மூடிக்கொண்டிருப்பேன்?நீசற்று நேரம் ஓய்வெடு.என்னையும்ஓய்வெடுக்க விடு…இடைவிடாதுநொடிகளை மட்டுமாநீயெடுத்துக் கொள்கிறாய்?எனக்கானவாழ்வையும்தான்…என்னைச்சுற்றிக்கொண்டிருக்கும்அத்தனையும் எனக்குஎதிரானதா?ஆதரவானதா?ஆதரவாய்எண்ணி நெருங்கினால்அழகானப் பூக்களின்காம்புகளுக்குப் பதிலாகமுட்கள் முளைத்திருக்கிறது…எதிரானதுஎன்று விலகினால் பூக்களைவிடக்கவர்ச்சியுடன் கனிகள் நிறையஈர்க்கிறது…பசியோடிருக்கும்நானென்ன செய்ய?அருகிருந்து அநீதியைஆதரிக்கவும் முடியாது…தூரநின்றுகனிகளைப் பார்வையால்புசித்துப் பசியாறவும்இயலாது…ஏ…பரபரப்பே…நீ என்னைத் தின்றுசெரித்துக் கொண்டிருக்கிறாய்.உன்னைஆக்கியோரெல்லாம்கொழுத்துக் கொண்டிருக்கின்றனர்…சுதந்திரமாய்ஒரு நிமட மூச்சு…இதுவெல்லாம்இனியெனக்கு…

விடைபெற்றார் விவேக்-அஞ்சலிக் கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் இதயங்களின் கனதிகள்காற்றில் கலைந்து விடமனப்பறவை புன்னகையோடுசிறகை விரித்திடநகைச்சுவையை நாளும்அள்ளி வீசியெறிந்தவன்நாடி துடிப்பின்றிஉறங்குகிறான்நீங்காத நித்திரையில்…அறுவை சிகிச்சையன்றிசிரிப்பு சிகிச்சையால்கோடி நெஞ்சங்களின்இதய அடைப்புகளைநீக்கிய மருத்துவன்மறைந்து விட்டான்மாரடைப்பால்…மரணமே..! நீபுசிப்பதற்கு வேறுஅகோரன் இல்லையா..?விழிப்புணர்வுகளால் விழித்தவன்விழிகளை மூடிக்கொண்டான்..சீறும் சிந்தனைகளால்சமூகக்கறைகளை சாடியவன்..நகைச்சுவையால் மனங்களைகொள்ளை அடித்தவனைகொள்ளை கொண்டான்மறலியவன் …கொரனாவின்…

மதி மயக்கும் மது – கவிதை!!

எழுதியவர் – கதிரவன் மதி மதி இழந்துமது பெற்றுபணம் இழந்தாய்…அவனோ…மதி மயக்கிமது தந்துபணம் படைக்கான்.கொடுத்துப் பார்போதை உண்டாகும்அன்பு வைபோதை உண்டாகும்கற்றுக் கொடுபோதை உண்டாகும்அறிவை தேடுபோதை உண்டாகும்இத்தனையும் இருக்கையிலேஅத்தனையும் உதறி விட்டுஅருவருக்கும் அந்த மருந்தைஆசையோடு குடிப்பது ஏன்?

விடுதலையின் வாசல்….-கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் கவிஞனின் கவிக்குள்மென்பூக்களாய் வாசம் வீசினாலும்நிஜமதில் சுடும் பூக்களெனவேகருகிக் கொண்டிருக்கிறோம்..பேருந்து நெரிசலில்கழுத்தருகே கழுத்தறுக்கும்பெருமூச்சுகளுக்கும்காதருகே கேட்டிடும் கொச்சைச் சொற்களுக்கும் இடையில்சிக்கி தவிக்கிறதெங்கள் பெண்மை..பணத்திற்காய் பாய் விரிக்கும்ஓராயிரம் மாதவிகள்விற்பனைக்கு இருக்கும் போதுபச்சிளம் பிள்ளைகளைகுறிவைக்கும் கயவர்களுக்குஎன்னவென்று பெயரிட்டுரைக்க..வக்கிரபுத்தியின் உக்கிம் தாளாமல்தொலைவில் மயான…

என் உயிர்வலி நீயே – கவிதை!!

எழுதியவர் – Fatima உன்னால் நான் ஆழங்கள் தாண்டிவேர் பாய்கிறேன்.உன்னை பார்த்துதான்கைகள் அகல விரித்து ஆகாய அளவு அகலமாகிறேன்.உன் போல புன்னகையால் நானும் மலர்கிறேன்.சில நேரம் முகம் மோதும் காற்றுக்குஉன் போல் தலை அசைக்கிறேன்.புயல் வந்தாலும் துணிவும் நீ சொன்ன வேதங்கள்…

மாறுபட்ட யுத்தம் – கவிதை!!

எழுதியவர் -குமரன்விஜி துயரமே நான்தான்உனக்கு மிகவும் பிடித்த எதிரி வந்திருக்கிறேன்யுத்த கோட்டுக்குள்உனக்கும் எனக்கும் நாள் தவறாது யுத்தம்உன் வரலாற்று நாவால்ருசித்துமென்றென்னை பலமுறை விழுங்குகிறாய்நானுன் குடலிறங்கும்போதுஉன்உயிருக்கு அவ்வளவு சுகம்என்னை நசுக்குவதாய்நீ விழுங்குகிறாய்ஆனால்உன் குடலுள் புகுந்ததும்எனக்குவாள் நகம் முளைக்கிறதுபோராடாமல் இருக்க முடியுமாஒவ்வொரு முறையும்உன் வயிற்றை…

புத்தாண்டு வாழ்த்துகள்- கவிதை!!

புத்தொளி வீசிடும்புத்தாண்டு திருநாளில்இன்பங்கள் துலங்கி,துன்பங்கள் விலகிஎண்ணங்கள் யாவும்வண்ணமாய் சிறந்துபண்ணொடு இசையாய்பனுவலின் அழகாய்புதுமைகள் தனையேபலவிதம் படைத்துஇசையென வாழ்வைஇதமாய் ரசித்தேநாளிகை யாவும்நாதமாய் சிறக்கபுத்தொளி வீசிடும்புத்தாண்டு திருநாளில்அன்புசார் அகிலஉறவுகள் அனைவர்க்கும்எமதகம் நிறைந்தஇனிய வாழ்த்துகள்…….!!

SCSDO's eHEALTH

Let's Heal