நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் விவாதிப்பதற்காக, பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக் கூடியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று (23.07.2026) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் கவலைகள் காரணமாக எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்த முன்மொழிவு தொடர்பாக, ஒரு பொதுவான எதிர்க்கட்சி நிலைப்பாட்டை வகுப்பதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக பார்க்கப்படுகிறார். நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு, சமீப நாட்களாக ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதன்போது, நீதித்துறையைப் பாதிக்கும் எந்தவொரு மாற்றமும் பரந்த கலந்தாலோசனைக்குப் பின்னரும் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வாதிடப்பட்டுள்ளது.