நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனையில், அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின்படி, தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அதிகாரிகள் உயிரிழந்தனர்.ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேருக்கு, ஐந்து பேர் கொண்ட தடயவியல் குழு பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளது. அதன்படி, பிரேதப் பரிசோதனையில் 14 மரணங்கள் துப்பாக்கிச் சூட்டாலும், மேலும் 9 மரணங்கள் தாக்குதல்களாலும் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஒரு மரணத்தில் முடிவு எட்டப்படவில்லை.கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது உயிரிழந்த சிறைக் காவலரின் மரணம் குறித்த தகவல் நேற்று (09) மாளிககந்த நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.மேலும், பிரேதப் பரிசோதனை தொடர்பான சான்றுகளின் ஆய்வும் நிறைவடைந்துள்ளது. நீர்கொழும்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 28 உடல்களில், 24 உடல்களின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்து, அவை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு உடல்களுக்கான பிரேதப் பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இறந்தவர்களில் ஒரு இந்திய நாட்டவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.