×

கடந்த சில நாட்களில் ஏற்பட்ட திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று  பிற்பகல் (04) வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேரிடரில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.  

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115