×

திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 52 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் திருகோணமலை பகுதியில் வசித்து வருபவர் என்றும் சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்ட கல் 3 கிலோ 100 கிராம் எடையுடையது என்றும் கூறப்படுகின்றது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.   

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115