உயிர்த்தது குண்டு தாக்குதலுக்கு நீதி கோறி இன்றுவரை குரல் கொடுக்கும் பேராயர் மெல்கம் கத்தினால் ரஞ்சித் ஆண்டகையும் கத்தோலிக்க சபையினரும் இந்த நாட்டில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்று கூறுவதற்கு தயக்கம் காட்டுவது ஏனென்று இலங்கை தமிழரசு கட்சி நாடலமற்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடலமற்றத்தில் நேற்று நடைபெற்ற பலசக்தி மற்றும் வாழ்க்கை செலவு பாதுகாப்பு திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்திலேயே அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கேள்வி எழுப்பினார். மேலும் அவர் குறிப்பாக கூறுகையில் யாழ் மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டில் ராணுவத்தினரால் வலிக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மயிலட்டி மக்கள் 35 வருடங்கள் கடந்தும் இன்னும் தங்களின் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிர்த்து வருகின்றனர். தமது நிலங்களை விடுவிக்க கூறி அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மயிலட்டியில் போராட்டம் நடாத்துகின்றனர். மக்களின் சொந்த காணிகளில் ராணுவத்தினர் குடியேறவும் இல்லை. ஆனால் அங்கு விவசாய தோட்டம் செய்கின்றனர். யாளில் ராணுவத்தினர் சலூன்கள், முன்பள்ளிகள் மற்றும் விவசாய தோட்டங்களை நடத்தி காய்கறிகளை சந்தையில் விக்கின்றனே தவிர மக்களின் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர். முன்னாள் நாடலமற்ற உறுப்பினர் ரவிகரன், பிரிகேடியர் பால்ராஜ் குறித்து பேசினார் என்பதற்காக நாடலமற்றத்திற்கு வெளியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் சொந்த மண்ணில் குடியேற முடியாமல் 35 வருடங்களுக்கு மேலாக மக்கள் உறவினர் வீடுகளில் வாழும் அவலநிலை குறித்து எவரும் பேசுவதில்லை என்றும் அவர் கூறினார்.