நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று(2) ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.