×

கொழும்பின் புறநகர் பகுதியில் ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து குறுக்கு வழிகளில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து, நீண்ட காலமாக பாரியளவில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 90 போதை மாத்திரைகளுடன் ஹோமாகம கொட்டாவ போதை மாத்திரைகள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தம்பதியினராகும்.

பாழடைந்த இடங்களை தெரிவு செய்து காதலர்கள் போன்ற பாவனையில் போதை மாத்திரை விற்பனை செய்யும் வலையமைப்பு ஒன்று செயற்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய செயற்பட்ட அதிகாரிகள் குழுவினர், பாதுக்க மாவத்தகம பாடசாலை வீதியில் தந்திரோபாய நபர் ஒருவர் மூலம் 1000 ரூபா பணத்திற்கு 10 போதை மாத்திரைகள் அடங்கிய அட்டை ஒன்றை கொள்வனவு செய்துள்ளனர்.

அதன் பின்னர் அவை போதை மாத்திரை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், வழங்கப்பட்ட சைகையின் அடிப்படையில் அருகில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஏனைய அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த தம்பதியை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களைச் பரிசோதனை செய்தபோது, போதை மாத்திரை விற்பனை மூலம் பெறப்பட்ட 1000 ரூபா பணத்திற்கு மேலதிகமாக, அவர்கள் வசமிருந்த மேலும் 80 போதை மாத்திரைகளும், வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்பும் போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் மீகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115