×

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று(16.08.2026) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டது. இது நாளை (17) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 முதல் 60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். மேலும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக மாறக்கூடும். அதேபோன்று, தீவைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். மேலும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக மாறக்கூடும். இதற்கமைய, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115