நாடலமற்ற உறுப்பினர் பிரபுவை தாக்க உற்பட்டதை ஈபிடிபி கட்சியின் மட்டு
ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் வென்மையாக கண்டித்துள்ளார். மட்டக்களப்பு பாலமின் மடுவில் அவரது காரியாலயத்தில் நேற்று
இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார். கடந்த வாரம் காத்தான்குடி பிரதேச அபவிருத்தி குழு கூட்டத்தின் போது நாடலமற்று உறுப்பினர் கந்தசாமி பிரபவை
நாடலமன்ற உறுப்பினர் ஏஎல் எம் ஹிஸ்புல்லா அநாகரிகமான முறையில் தாக்க முற்பட்ட சம்பவத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அவர்
கூறினார். கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இன முரண்பாடுகளை தோற்றுவித்து அதன் மூலம் அரசியலில் குளிர்காய்ந்து வந்தவர் ஏஎல்எம்
ஹிஸ்புல்லா அவர் மீண்டும் மட்டகளப்பில் தமிழ் முஸ்லிம்களுக்கிடையே இன முரண்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு
மேலாக அரசியல் அனுபவம் கொண்ட ஒருவராக இருந்து கொண்டு சக நாடலமன்ற உறுப்பினர் ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்க முற்பட்டதற்கு கந்தசாமி பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறி போக்கே அகாரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.