காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து பீர் கொண்டுவந்து கொடுத்து பருகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 8 இல் கல்வி பயிலும், மாணவி ஒருவரே இவ்வாறு வீட்டிலிருந்து பீர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே மாணவிகள் பீர் அருந்திய விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், மாணவி பாடசாலைக்கு எவ்வாறு பியர் எடுத்து வந்தார் , அதைப் பாடசாலை நேரத்தில் பருகியது எப்படி? பாடசாலை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது, என பிள்ளைகளின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal