மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு முன் விற்று தீர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு சீன சந்தையில் துவங்கியது.

இந்த நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 முன்பதிவு நிறுத்தப்பட்டதாக லெனோவோ மொபைல் வியாபார பிரிவு பொது மேலாளர் சென் ஜின் தெரிவித்துள்ளார்.

ஐந்து இலக்க யூனிட்கள் இதுவரை விற்றுத்தீர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 விற்பனை டிசம்பர் 15 ஆம் திகதி துவங்குகிறது.

சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை இலங்கை மதிப்பில் தோராயமாக ரூ 90,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்: மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மொடலில் 6.7 இன்ச் பிளெக்சிபில் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50 எம்.பி. வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 50 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 60 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு சிம் கார்டுகளை இதில் போடலாம், மேலும் மல்டி டச் வசதியுடன் இந்த போன் வருகிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30ன் பேட்டரி Li-Po ஆகும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal