இறக்குமதியில் சிக்கல்...மீண்டும் பால்மா தட்டுபாடா?

நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக பால்மாவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான தொகையே இன்னும் செலுத்தப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரைப் பெற்று தருமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா நிறுவனங்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 250 ரூபாவால் அதிகரித்தன. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால் 1,195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 400 கிராம் பால்மா 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 480 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.     

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal