
யாழ்ப்பாணம், சில்லாலை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், 240 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபா 72 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (28), வடக்கு கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையிலேயே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.