அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிகைகளும் எதிர்வரும் 10 திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்படுவது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்ட போதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal