
இன்று காலை கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அங்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குடியிருப்புக்குள் சிறுத்தை நுழைந்த நிலையில் குறித்த நபரின் வீட்டு வளர்ப்பு நாய் வழமைக்கு மாறாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதை அடுத்து வீட்டினர் சுற்று சூழலை பார்வையிட்டு்ள்ளனர்.
நாய் குரைக்கும் திசையில் குறித்த சிறுத்தை அச்சத்தின் மத்தியில் மரத்தின் மீது ஏறி இருப்பதை அவதானித்த அவர், இது தொடர்பில் படையினருக்கு தகவல் வழங்க , படையினர் சிறுத்தையை அவதானித்ததுடன், சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து வன ஜீவராசி திணைக்களத்தினரின் நீண்ட முயற்சியின் பின்னர் சிறுத்தை வெளியேறியது.