
தேவையான பொருட்கள்:
- பால் – 300 மி.லி
- உளுந்து – 50 கிராம்
- முட்டை – 1
- சர்க்கரை – தேவையான அளவு
- நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
- உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
- பால் கொத்தித்தவுடன் சிம்மில் வைத்து, முட்டையை அடித்துக் கொடி போல் ஊற்றவும், கிளறக்கூடாது.
- இதனுடன் மசித்து வேகவைத்த உளுந்தைச் சேர்க்கவும். பின் தேவைக்குச் சர்க்கரை சேர்க்கவும்.
- அடியில் பால் உறையாமல் காய்ச்சி எடுக்கவும்.
- கெட்டியாக இருந்தால் கொஞ்சம் சுடு நீர் சேர்க்கலாம்.
- பின்பு ஒரு ஸ்பூன் நெய் விடவும்.
- உளுந்தம்கஞ்சி தயார்.