தேவையான பொருட்கள்:

  1. இட்லி அரிசி – 1/2 கப்
  2. புளி – 1 தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  4. கடுகு – 1/2 தேக்கரண்டி
  5. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  6. கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
  7. மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
  8. நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
  9. பெருங்காயத்தூள் – சிறிது
  10. கருவேப்பில்லை – சிறிது
  11. உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  1. அரிசியைக் களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. புளியை 1/4 கப் வெந்நீரில் ஊற வைக்கவும்.
  3. அரிசி ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  4. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
  5. அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
  6. ஊற வைத்தப் புளியைக் கரைத்து, 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  7. தண்ணீர் கொதிப்பதற்கு முன்பாக அரைத்த மாவு சேர்த்துக் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  8. மாவு நிறம் மாறி கெட்டியானவுடன், மிதமான நெருப்பில் வைக்கவும்.
  9. பின்னர் அதனை மூடி வைத்து ஐந்து நிமிடம் வரை வேக வைக்கவும்.
  10. கடைசியாக 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal