இன்று வியாழக்கிழமை அதிகாலை, மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 80வது வயதில் சுகயீனம் காரணமாக இயற்கை எய்தினார்.

இச்செய்தியை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீண்ட காலம் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர், இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் காலமானாதாக அவர் தெரிவித்தார்.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தினாலும் மதிக்கப்படும் ஒருவராக விளங்கிய ஆயரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பே.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal