
இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தான் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாகவும் உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும் நிலையில் அரசாங்கத்தைக் குறை கூற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு பொலிஸ் அதிகாரியால் ஒரு கறுப்பினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது அமெரிக்க அரசாங்கத்தை எவரும் குறை கூறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.