கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விடயம் தொடர்பாக சி.ஐ.டி.யினர் பீ அறிக்கையை சமர்ப்பித்து இதனை அறிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஓகஸ்ட் மாதம், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விக்னேஸ்வரன் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்துக்கள் இனங்களிடையே, நாட்டில் குழப்பத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருந்ததாக கூறி, முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பயங்கரவாத தடை சட்டம், சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவைகளின் கீழ் இவ் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யினர் நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal