பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் எனக் கூறிக்கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு  வந்த இருவரைப் .பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து 83 கையடக்கத் தொலைபேசிகள், 4 டெப் இயந்திரங்கள் மற்றும் 5 மடிக்கணினிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்களைப் போன்ற கொள்ளையர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிகையுடன் இருக்குமாறு பொலிசார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal